சிறார் புலிகள்: சந்திரிகா மீண்டும் புகார்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களைத் தொடர்ந்து சேர்த்து வருவதாக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களைச் சேர்த்து வருவதாகப் பல ஆண்டுகளாகவே புகார் வந்துகொண்டிருக்கிறது. சந்திரிகாவும் பலமுறை இது தொடர்பாகப் புலிகளைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கையின் 55வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு சந்திரிகா உரையாற்றுகையில்,
புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களையும் சிறுமிகளையும் சேர்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி பலமுறை நான்எச்சரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் புலிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை.
இலங்கை அமைதிக்கான முயற்சிகளில் நானும், ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ந்து உதவி வருகிறோம்.
ஆனால் புலிகள் இயக்கத்தில் சிறுவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்த வருவது பேச்சுவார்த்தைமுயற்சிகளையே பாதிக்கலாம். மேலும் இலங்கையின் எதிர்காலமும் இதனால் பாதிப்படையுமோ என்று நான்அஞ்சுகிறேன்.
எனவே புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறார்களைச் சேர்த்துக் கொள்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
போரைப் பின்னுக்குப் புறந்தள்ளி விட்டோம். இனி இலங்கை மக்களின் ஒவ்வொருவருடைய உரிமைகளும்அவர்களுக்குக் கிடைப்பதற்கான முயற்சிகளில்தான் அனைவரும் ஈடுபட வேண்டும்.
அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. நாம் அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்சந்திரிகா.












Click it and Unblock the Notifications