For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுமாறன் மருத்துவமனையில் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் இருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரானபழ. நெடுமாறன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி கைது செய்யப்பட்டார் நெடுமாறன்.

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுமாறன், சென்னையில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்திற்கும்,வேறு சில வழக்குகள் தொடர்பாக திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ளநீதிமன்றங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் திருச்செந்தூர் நீதிமன்றத்திலிருந்து கடலூருக்கு கொண்டுவரப்பட்டபோது அவர் வந்த போலீஸ் வேன்கவிழ்ந்ததில் நெடுமாறன் காயமின்றி தப்பினார். அதிலிருந்த மூன்று போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடலூர் சிறையிலிருந்த நெடுமாறனுக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து சிறையிலேயே நெடுமாறனுக்கு சிகிச்சை அளிகப்பட்டது.

ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்காததையடுத்து கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில்இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சேர்க்கப்பட்டார்.

சக்கர நாற்காலியில் வைத்தே அவர் கொண்டுவரப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நெடுமாறன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவரைப் பார்ப்பதற்காகஏராளமானவர்கள் கூட ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X