அமெரிக்க கோவில்களில்சிறப்பு பிரார்த்தனை
லாஷிங்டன்:
மறைந்த கல்பனா சால்வாவுக்கும், பிற விண்வெளி வீரர்களுக்கும் வாஷிங்டனிலும் ஹூஸ்டனிலும் உள்ள கோவில்களில் அஞ்சலிசெலுத்தும் சிறப்புப் பிரார்தனைகள் நடைபெற்றன.
வாஷிங்டனில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் நடைபெற்ற இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங்கும் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தின்ர்.
விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ள ஹூஸ்டனில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் மறைந்த வீரர்களின் ஆன்மாசாந்தியடைய சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதே போல அமெரிக்காவில் பல கோவில்களிலும் தேவாலயங்களிலும் வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.கென்னடி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஜான்சன் விண்வெளி நிலையம், விண்வெளி மியூசியங்கள் உள்பட விண்வெளி தொடர்பானஅனைத்து மையங்களிலும் ஆயிரக்கனக்கான மக்கள் கூடி மெழுகுவர்த்திகளை ஏற்றியும் மலர்களை வைத்தும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதற்கிடையே இந்த ராக்கெட் விபத்தில் இறந்த இஸ்ரேலிய விண்வெளி வீரர் இலான் ரமோனின் மனைவி, நாஸா ஆராய்ச்சி மையத்தைப்பாராட்டியுள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் பேசிய அவர்,
எனது கணவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய இழப்பு தான். ஆனால், நாஸாவுக்கு ஏற்பட்ட இழப்பு அதைவிடப்பெரியது. கடந்த 15 நாட்களும் என கணவர் வானத்தில் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். அந்த மகிழ்ச்சியை நாஸா தவிர வேறு யாரும்தந்திருக்க முடியாது.
மறைந்த 7 வீரர்களும் வானத்தில் சேர்ந்துவிட்ட தேவதைகள் என்றார்.
-->