For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை காவலர் மீண்டும் சாதனை: 32 அடி கோபுரத்திலிருந்து சொய்ய்ய்ங்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆயுதப் படை போலீஸ்காரரான வேல்முருகன் 32 அடி உயர கோபுரத்திலிருந்து நீர்த்தொட்டியில் குதித்து சாதனை படைத்தார்.

கடந்த டிசம்பர் 8ம் தேதி சென்னை துறைமுகத்தில் 126 அடி உயரத்திலிருந்து கடல் நீரில் குதித்து வேல்முருகன்சாதனை புரிந்தார்.

இந்நிலையில் சென்னை-ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் உள்ள 32 அடி உயர கோபுரத்திலிருந்து நீர்நிரப்பப்பட்ட தொட்டிக்குள் குதிக்க முடிவு செய்தார்.

இதற்காக 12 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட ஒரு நீர்த் தொட்டியில் 27 செ.மீ. உயரத்திற்கு நீர்நிரப்பப்பட்டது.

பின்னர் நேற்று மாலை 4.30 மணிக்கு 32 அடி கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற வேல்முருகன், அந்த நீர்த்தொட்டியில் குதித்து புதிய சாதனை படைத்தார்.

இத்துடன் 11 சாதனைகளைப் புரிந்துள்ள வேல்முருகன் நிருபர்களிடம" கூறுகையில், இதற்கு முன் அமெரிக்காவின்டேனி ஹிக்கின்போதம் என்பவர் 29 அடி உயரத்திலிருந்து 30 செ.மீ. உயர நீர்த் தொட்டியில் குதித்து சாதனைபடைத்தார்.

அந்தச் சாதனையை நான் முறியடித்துள்ளேன். இதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆளியாறுஅணைக்கட்டில் மூன்று மாதங்களாகச் சிறப்பு பயிற்சி எடுத்தேன்.

அடுத்ததாக தொடர்ந்து 1,008 மணி நேரம் தொடர்ந்து ஓடி, ஆஸ்திரேலிய வீரரின் 1,000 மணி நேர தொடர்ஓட்டச் சாதனையை முறியடிக்கப் போகிறேன்.

மேலும் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி தமிழகத்தின் பல மாவட்டங்கள் வழியாக 72 நாட்கள் ஓடிபொதுமக்களிடமிருந்து ரூ.1 கோடி வரை நிதி வசூல் செய்து, தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டம், அனாதைக்குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் நலனுக்காக அதை அளிக்கவுள்ளேன் என்றார் வேல்முருகன்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X