பவானி அணை விவகாரம்: தலையிட மத்திய அரசு மறுப்பு
டெல்லி:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு முயற்சிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாதுஎன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜுன் சரண் சேத்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பாய்ந்து மீண்டும் தமிழகம் நோக்கியே பாயும் பவானி ஆற்றின் குறுக்கேஅணை கட்டுவதற்கு கேரள அரசு முயற்சித்து வருகிறது.
கேரள அரசின் இந்த முயற்சியைக் கண்டித்து தமிழத்தில் உள்ள எதிர்க் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பவானியின் குறுக்கே கேரள அரசு அணை கட்டக் கூடாது என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை தடை விதித்தது.
இந்நிலையில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சரான ஜேக்கப் இன்று காலை அர்ஜுன் சரண் சேத்தியைச் சந்தித்துப்பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அர்ஜுன் சரண் சேத்தி பேசுகையில்,
இது ஒரு சிறிய பிரச்சனைதான். இந்த விவகாரத்தை தமிழக, கேரள மாநில அரசுகளே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
எனவே இந்தச் சிறிய விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றார்.
அதன் பின்னர் பேசிய ஜேக்கப், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு எந்த அணையையும் கட்டமுயற்சிக்கவில்லை. ஒரு தடுப்புச் சுவரை மட்டுமே எழுப்பிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
-->












Click it and Unblock the Notifications