கல்பனாவுக்கு இந்திய நாடாளுமன்றம் நாளை அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கொலம்பியா ராக்கெட் விபத்தில் 6 வீரர்களுடன் பலியான இந்திய விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவுக்கு நாளை இந்தியநாடாளுமன்றம் அஞ்சலி செலுத்தவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்புக் கூட்டம் நாளை நடக்கிறது. இதனை பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், கல்பனா சாவ்லாவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை, இந்த தேசமும் நானும் அந்தப்பெண்ணின் சாதனையை மறக்கவே மாட்டோம். கடந்த 2000ம் ஆண்டில் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது கல்பனாவைச்சந்தித்தேன். அதையும் என்னால் மறக்க முடியவில்லை.
விண்ணுக்குச் சென்ற அந்த சுட்டி இந்தியப் பெண் பூமி திரும்பாதது மனதை அடைக்கிறது என்றார் வாஜ்பாய்.
-->












Click it and Unblock the Notifications