வரலாறு காணாத அளவுக்கு "கிடுகிடு"வென உயர்ந்தது தங்கம் விலை
சென்னை:
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.555க்குவிற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளியிலிருந்தே தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. அதன்பின்னர் வந்த கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டியும் தங்கத்தின் விலை மளமளவென்று அதிகரித்தது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.516ஆக உயர்ந்த போது, தங்கநகை வியாபாரிகளே கூட திணறித்தான் போனார்கள்.
புத்தாண்டுக்குப் பின்னர் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச சந்தையில்அமெரிக்காவின் டாலர் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து தங்கத்தின் விலைமேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட போதிலும் தங்கத்தின் விலைஏறுமுகத்திலேயே இருந்தது.
இந்நிலையில் இன்று காலை வணிகம் தொடங்கியபோது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.545ஆக இருந்தது.
பின்னர் மளமளவென்று ரூ.565 வரை உயர்ந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்றைய வணிகத்தின் நிறைவில்ரூ.555ஆக இருந்தது.
சுத்தத் தங்கமான 24 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.599ஆக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறிய சென்னைநகை வியாபாரிகள் சங்கத் தலைவரான பாண்டுரங்கன், அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும் வரை தங்கத்தின்விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications