துணிச்சலான பெண்ணுக்கு கல்பனா விருது: தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று கல்பனா சாவ்லா பெயரில் துணிச்சல் மிக்க பெண்ணுக்கு விருது வழங்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விருது ரூ. 5 லட்சம் நிதியும், தங்கப் பதக்கமும் கொண்டது.

கொலம்பியா ராக்கெட் விபத்தில் 6 வீரர்களுடன் பலியான கல்பனாவின் பெயரில் விருது வழங்க முதல்வர்ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் துணிச்சல் மிக்க பெண்ணாகத் தேர்வு செய்யப்படுபவருக்கு "கல்பனா சாவ்லாவிருது" வழங்கப்படும். குடியரசு தினத்தன்று இந்த விருதை முதல்வர் வழங்குவார்.

முன்னதாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின்போது கல்பனா மறைவுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலிசெலுத்தப்பட்டது.

உலக அரங்கில் எந்த ஒரு இந்தியப் பெண்ணாலும் சாதனை செய்ய முடியும் என்பதற்கு கல்பனா சிறந்தஉதாரணமாகத் திகழ்ந்துள்ளார். கொலம்பியா ராக்கெட் வெற்றிகரமாக தரை இறங்கியிருந்தால் கல்பனாவின்விண்வெளிப் பயணம் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்று அமைச்சரவை தனது இரங்கல் செய்தியில்குறிப்பிட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+