சென்னை வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ.100 கோடி
சென்னை:
வளைகுடா நாடுகளிலிருந்து வந்த பணம் குவாலிஸ் கார் மூலம் சென்னையிலிருந்து கேரளாவுக்கு தினமும் ரூ.1.5கோடி வீதம் ரூ.100 கோடி வரை கடத்தப்பட்டுள்ளதை தமிழக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் அருகே அயோத்தியா பட்டணம் என்ற இடத்தில் குவாலிஸ் கார் மூலம் கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்தரூ.75 லட்சம் ஹவாலா பணத்தை சமீபத்தில் சேலம் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக 3 கேரள வாலிபர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் மத்திய பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மீரா குட்டி என்ற நபர் மூலம்தான் இந்தப் பணம் கேரளாவுக்குஅனுப்பப்பட்டது தெரிய வந்தது. மீரா குட்டிக்கு வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஹவாலா மூலம்தினசரி ரூ.1.5 கோடி வரை வந்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்தப் பணத்தை குவாலிஸ் கார்கள் மூலம் தினசரி கேரளாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் அவர். இப்படியேசுமார் ரூ.100 கோடி வரை கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று இதுவரை தெரியவில்லை. இந்த ஹவாலா மோசடிதொடர்பாக மீரா குட்டியைப் போலீஸார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->