இலவச அரிசி: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
சென்னை:
விவசாயிகளுக்கு இலவச அரிசி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மத்திய எரிசக்தித் துறை இணைஅமைச்சர் கண்ணப்பன் புகார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு மாதம் 30 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தமிழக அரசுஅமல்படுத்தியுள்ளது.
ஆனால் பல விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையவில்லை. பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்எழுந்துள்ளது.
எனவே, உரிய முறையில் விவசாயிகளைக் கணக்கெடுத்து அனைவருக்கும் இலவச அரிசி சென்றடையும்வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து முதல்வரும், ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகசெயல்படும் சிலரும் தரக் குறைவாகவும், ஆதாரம் இல்லாமலும் புகார்கூறி, விமர்சித்துப் பேசியிருப்பதுகண்டிக்கத்தக்கது என்றார் கண்ணப்பன்.
-->