இலங்கை: நாளை ஜெர்மனியில் 5வது சுற்று அமைதி பேச்சு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 5வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரில் தொடங்குகின்றன.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது, புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள், சிறுமிகள்சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்பான பிரச்சனை மற்றும் சில மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளும்விவாதிகக்கப்படவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப. தமிழ்ச்செல்வனும், ராணுவப் பிரிவுத் தலைவர் கருணாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே பெர்லின் சென்று விட்டனர்.
இந்நிலையில் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஜி.எல். பெய்ரிஸ் நேற்று பெர்லின்கிளம்பிச் சென்றார்.
புலிகளின் அரசியல் ஆலோசகரும் புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஆன்டன் பாலசிங்கமும்அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும் இன்று லண்டனிலிருந்து நேரடியாக பெர்லின் சென்று விடுவார்கள்.
பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பேச்சுவார்த்தை தாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்குமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெர்லினில் நான்கு நாட்கள் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைஇதே காரணத்துக்காக இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜப்பானில் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்குகின்றன என்பதும்நினைவு கூறத்தக்கது.
புலிகளின் ராணுவப் பிரிவில் சிறார்களைச் சேர்ப்பது தொடர்பாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த "யூனிசெப்"பின் தலைவர்களும் ஜெர்மனிக்கு விரைகின்றனர்.
சிறார்களை இனி எங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று எழுத்து பூர்வமான உறுதிமொழியை "யூனிசெப்"அமைப்புக்கு புலிகள் வழங்குவார்கள் அப்போது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்களையும் சிறுமிகளையும் மீட்டு, அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைஅமைப்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் "யூனிசெப்" ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications