மதுரை உயர் நீதிமன்ற கட்டடம்: திமுக செய்த ஊழல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திமுக ஆட்சியில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடம் கட்ட காண்ட்ராக்டர்களுக்கு டெண்டர்கள் விட்டதில்மாபெரும் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த விவரங்கள் இப்போது தான் வெளிவர ஆரம்பித்துள்ளன.

மதுரை உலகனேரி பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் உயர் நீதிமன்றக் கிளைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

முக்கால்வாசிக்கும் மேலான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது கட்டுமானப் பணியில்டெண்டர் விட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் இந்தக் கட்டடப் பணிகள் தொடங்கின. இதில் தான் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக புகார்கள் குவிந்ததையடுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை கட்டடத்தை ஊழல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

கட்டடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட், இரும்பு, செங்கற்கள், மார்பிள் கற்கள் உள்ளிட்டவற்றைஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

சோதனையின்போது அங்குள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பல்வேறு போலி பில்கள், முறைகேடாகத்திருத்தப்பட்ட ஆவணங்களும் சிக்கியுள்ளன.

மேலும், சில காண்டிராக்டர்களிடமிருந்து ரூ.50,000 வரை அன்பளிப்பாக பெற்றதாக பொதுப்பணித் துறைமேற்பார்வை பொறியாளர் ஒருவர் ஒத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை செயல்படத் தொடங்கும் என சமீபத்தில்தான்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் திமுக ஆட்சியில் நடந்த இந்த ஊழல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+