ஊட்டி, குன்னூரில் வெளுத்துக் கட்டும் கன மழை
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை கால சீசன் தொடங்கஉள்ள நிலையில் கன மழை பெய்து வருவதால் இம்மாவட்ட மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் வறட்சி நிலவும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றால அருவிகளிலும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று முதல் அங்கு நன்றாகமழை பெய்து வருகிறது.
இதனால் இத்தனை நாட்களாக வாடிக் கிடந்த உருளை உள்ளிட்ட பயிர்களுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது.மேலும் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல்வேறு ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஊட்டி, குன்னூர், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகஇந்த ஆண்டு கோடை கால சீசன் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications