For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை கோவில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கொடி மரத்திற்குஇன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோவிலில் உள்ள கொடி மரத்தின் வயது 184. முழுக்க முழுக்க தேக்கு மரத்தால் ஆன இந்தக் கொடி மரம்சரபோஜி மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மெருகு குலைந்து காணப்பட்ட இந்தக் கொடிமரம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதற்காகவெளிநாட்டிலிருந்து தேக்குமரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சுமார் 35 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான புனித நீர் ஒரு யானையின் மூலம் இன்று அதிகாலை தஞ்சாவூர் நகர்முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் இன்று காலை கொடி மரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகநிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தஞ்சாவூருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X