சாத்தான்குளம்: தேர்தல் பணியில் மத்திய ஊழியர்களா?- தமிழக அரசு ஊழியர்கள் கண்டனம்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் பணிகளில் மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளதற்கு தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்களைப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடைவிதித்துவிட்டது.
அதிமுகவினரின் நெருக்குதல்களுக்கும் அரசுக்கு ஆதரவான போலீசாரின் நெருக்குதல்களுக்கும் பயந்துதான்மாநில அரசு ஊழியர்கள் செயல்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.
எனவே தேர்தல் நடத்தும் பணியை மத்திய அரசு ஊழியர்களிடம் தந்து, மாநில அரசும் அதிமுகவினரும்முறைகேடுகள் செய்வதைத் தடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சாத்தான்குளம் இடைத் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்களுக்குப் பதிலாக மத்திய அரசுஊழியர்களைப் பயன்படுத்த மாநில தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி முடிவு செய்துள்ளார்.
ஆனால் தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை மாநில அரசு ஊழியர்கள் கண்டித்துள்ளனர். இது தொடர்பாகமாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 50 ஆண்டு காலமாக இடைத் தேர்தலாக இருந்தாலும் சரி. பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி. தமிழகஅரசு ஊழியர்கள்தான் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நடைமுறைக்கு மாறாக தற்போது முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தமுடிவு செய்துள்ளது மாநில அரசு ஊழியர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது.
அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு அரசியல் சாயம் பூச தேர்தல் கமிஷன் முனைந்துள்ளதுகடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவ்வறிக்கையில் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
சாத்தான்கும் தேர்தலுக்கான மத்தியப் பார்வையாளர்களாக அணுசக்தித் துறை இணைச் செயலாளர் வி.பி. ராஜா,பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அன்சுலி ஆர்யா ஆகியோர் சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->