For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை-மும்பை விமானத்தில் வெடிகுண்டு புரளி

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசிதகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.

கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பல் 2.35 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றுமும்பைக்குக் கிளம்ப தயார் நிலையில் இருந்தது.

விமானம் கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன் ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு ஒரு மர்ம தொலைபேசிஅழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் ஒரு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போனை வைத்து விட்டான்.ஆனால் எந்த விமானம் என்று அவன் குறிப்பிடாததால் ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகள் குழம்பினர்.

இருந்தாலும் அப்போது மும்பைக்குக் கிளம்புவதற்குத் தயாராக இருந்த மும்பை விமானத்தை நிறுத்தி விட்டு,போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதற்குள் அந்த விமானத்திலிருந்த பயணிகளும் அவசரஅவசரமாகத தரை இறக்கப்பட்டனர்.

தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த போலீசார், விமானம்முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

அதன் பின்னர் மும்பை செல்ல வேண்டிய அந்த விமானம் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X