சாத்தான்குளம் தேர்தல்: நீலமேகவர்ணம், மகேந்திரன் மனுக்கள் ஏற்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்மகேந்திரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் 8 சுயேச்சைகளின் மனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை வேட்பு மனுக்களின் பரிசீலனைநடைபெற்றது.
தாக்கல் செய்யப்பட்ட 35 மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டன. இவற்றில் நீலமேகவர்ணம் மற்றும் மகேந்திரன்ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நீலமேகவர்ணத்தின் மீது கிரிமினல் வழக்கு ஒன்ற நிலுவையில் உள்ளதால் அவருடைய வேட்பு மனு ரத்துசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சுந்தரவள்ளி என்பவர் நேற்று கடைசி நேரத்தில் அதிமுகசார்பில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால் நீலமேவர்ணத்தின் வேட்பு மனுவை இன்று தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்துசுந்தரவள்ளி தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மொத்தம் எட்டு வேட்பு மனுக்கள் முறைப்படி தாக்கல் செய்யப்படாததால் அவற்றை தேர்தல்அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். மீதமுள்ள 27 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வரும் 10ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலை3 மணிக்கு சாத்தான்குளம் தொகுதி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் 26ம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மார்ச் 1ம் தேதி வாக்குகள்எண்ணப்பட்டு, அன்று நண்பகலுக்கு முன்பே முடிவுகள் அறிவிக்கப்படும்.
-->