பவானி அணை பிரச்சனை: தமிழக, கேரள எல்லையில் பிரம்மாண்ட பாதயாத்திரை
கோயம்புத்தூர்:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை நிறுத்தக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பாதயாத்திரை தமிழக, கேரள எல்லையில் உள்ளஆனைக்கட்டி பகுதியில் நடந்தது.
கொங்கு இளைஞர் பேரவை சார்பில் இந்தப் பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்னூர் பகுதியிலிருந்து கிளம்பிய யாத்திரை ஆனைக்கட்டி பகுதியில் முடிவடைந்தது.
பின்னர் தமிழக, கேரள எல்லைப் பகுதி அருகே சென்ற அவர்கள் கேரள அரசைக் கண்டித்தும் பவானியின்குறுக்கே அணை கட்டுவதை நிறுத்துமாறும் கோரி கோஷம் போட்டனர்.
பின்னர் கேரளாவுக்குள் சென்று தங்களது பாதயாத்திரையைத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்தபோதுஅப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் தலையிட்டு அவர்களைச் சமாதானப் படுத்தி கேரளாவுக்குள் அவர்கள் செல்லாமல்தடுத்து நிறுத்தினர். இந்தப் பதற்றத்தைத் தொடர்ந்து கேரள மாநிலப் போலீஸாரும் அப்பகுதியில் ஏராளமானஅளவில் குவிக்கப்பட்டிருந்தன.
-->