ஜெயலலிதாவுடன் கருணாநிதியை ஒப்பிடாதீர்கள்: வைகோ
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதியைக் கைது செய்ததன் மூலம் சட்டமன்றத்தின் அதிகாரத்தைநீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ இன்று காலைசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா எதையும் மிச்சம் வைக்கவில்லை. பரிதி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெயலலிதாவின்சர்வாதிகாரத்தனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
பரிதி மீதான கிரிமினல் நடவடிக்கை இப்போது நீதிமன்றத்திற்கு வந்து விட்டது. இதன் மூலம் சட்டமன்றத்தின்அதிகாரம் நீதிமன்றத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அவமானம்.சட்டமன்றமும் நீதிமன்றமும் தனித்தனி அமைப்புகள். அவை ஒன்று ஒன்று ஆக்கிரமிக்கக் கூடாது.
ஆனால், ஜெயலலிதா சட்டமன்றத்தின் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் சரண்டர் செய்துவிட்டார். ஜனநாயகமரபுகளை ஜெயலலிதா நாசம் செய்து வருகிறார்.
திட்டமிட்டபடி மதிமுகவினர் சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பார்கள். எந்த வேட்பாளருக்கும்அவர்கள் ஒட்டுப் போட மாட்டார்கள்.
கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகின்றன. இது மிகவும் தவறானது.ஜெயலலிதாவுடன் போய் ஜெயலலிதாவை ஒப்பிடாதீர்கள் என்றார் வைகோ.
இ.கம்யூ-மார்க்சிஸ்ட் போல திமுக-மதிமுக:
இதற்கிடையே பல விஷயங்களிலும் திமுகவைப் பின்பற்றி அக்கட்சி அறிவிப்பது போலவே மதிமுகவும்அறிவிக்கின்றதே என்று வைகோவிடம்ஒரு நிருபர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த வைகோ, "இந்திய கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வெவ்வேறு கட்சிகளாகஇருந்தபோதிலும் ஒரே கருத்துக்களைத்தான் கூறுகின்றன. அதைப் போலத்தான் நாங்களும் ஒரேகருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டுள்ளோம்".
ஜெயலலிதாவின் வெறியாட்டத்தை எதிர்த்து கலைஞர் குரல் கொடுக்கிறார். அதை நான் வழி மொழிகிறேன்.
என்னை மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உயிர் நண்பர் என்கிற வகையில் சந்தித்தார். எனது போராட்டம்தொடரட்டும் என்று வாழ்த்தினார்.
நான் இந்த வழக்கில் ஜாமீன் கேராவே மாட்டேன் என்றார் வைகோ.
-->












Click it and Unblock the Notifications