ஆடம்பர விழாக்கள் அவசியமா?: ஜெ.வுக்கு சோ.பா. கேள்வி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
நிதிப் பற்றாக் குறையில் இருப்பதாக கூறிக் கொண்டு அரசு விழாக்களை ஆடம்பர விழாக்களாக முதல்வர்ஜெயலலிதா நடத்துகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பா. குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நிருபர்களிடம் சோ.பா. கூறுகையில்,
அரசு கஜானா காலியாகியுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறையில் அரசு தவிப்பதாகவும் கூறிக் கொள்ளும்ஜெயலலிதா, மாவட்டந்தோறும் சென்று அரசுத் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
இந்த விழாக்கள் பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகின்றன. அரசு விழாவான இதில், ஏராளமானஅதிமுகவினர் கலந்து கொண்டு அதிமுக விழாக்கள் போல இவை நடத்தப்படுகின்றன.
இதனால் அரசுப் பணம் வீணாக விரயமாகிறது. இப்படி ஆடம்பர விழாக்கள் நடத்துவதை அரசு தவிர்க்கவேண்டும் என்றார் சோ.பா.
-->












Click it and Unblock the Notifications