சம்பா சோகம்: மேலும் ஒரு விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

சம்பா பயிர்கள் கருகியதால் பெண் விவசாயி அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அடங்குவதற்குள் பேராவூரணி அருகேஅதே காரணத்துக்காக இளம் விவசாயி ஒருவர் தன் வயலில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பா பயிர்கள் கருக ஆரம்பித்ததைத் தொடர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியால் இறப்பதும்,தற்கொலை செய்து வருவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நேற்று முன்தினம் கூட திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் கருகிய சம்பாபயிர்களைக் கண்டு அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு, அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த ஒரு விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பேராவூரணி பகுதியைச் சேர்ந்த விவசாயியனா சேகர் ரூ.5,000 வரை கடன் வாங்கி தன்னுடைய நிலத்தில் சம்பாபயிரிட்டிருந்தார். ஆனால் காவிரியில் நீர் விடாததைத் தொடர்ந்து அவருடைய வயலில் பயிரிடப்பட்டிருந்தசம்பா பயிர்கள் கருகத் தொடங்கின.

நேற்று தன் வயலுக்கு வந்திருந்த சேகர், அங்கிருந்த வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொந்தார். இதையடுத்துஅங்கிருந்த ஒரு மரத்தில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சம்பா பயிர்கள் கருகியதால் இளம் விவசாயியான சேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேராவூரணிபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+