காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ மேஜரின் உடல் சென்னையில் அடக்கம்
சென்னை:
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ மேஜர் யாசின் ஆச்சார்யாவின் உடல்சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு இன்று முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஆச்சார்யா கடந்த 7ம் தேதி காஷ்மீரில் நடந்த மோதலின் போது உயிரிழந்தார்.தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர்.
இதையடுத்து ஆச்சார்யாவின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. அவருடையஇல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மந்தைவெளி மயானத்திற்கு ஆச்சார்யாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. தென் மண்டல ராணுவஅதிகாரியான மேஜர் ஜெனரல் ஜாம்வால் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அப்போதுஆச்சார்யாவின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் கிருஸ்தவ முறைப்படியும், முழு ராணுவ மரியாதையுடனும் 24 குண்டுகள் முழங்க ஆச்சார்யாவின் உடல்அடக்கம் செய்யப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications