ருஷ்டியைப் பிரிந்தார் பத்மலட்சுமி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

Rushdie&Padma Lakshmiசர்ச்சைக்குரிய இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் இணைந்து வாழ்ந்து வந்த லண்டனைச் சேர்ந்த தமிழ் பெண் பத்மலட்சுமிபிரிந்துவிட்டார்.

தன்னைவிட 20 வயது வயதானவரான ருஷ்டியுடன் இந்த மாடலிங் பெண் பத்மலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக இணைந்துவாழ்ந்து வந்தார்.

ஆனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஏற்கனவே திருமணமானவரான ருஷ்டி ஈரான் நாட்டு அச்சுறுத்தலால் இங்கிலாந்தில் பலத்த பாதுகாப்புடன் வசித்து வருகிறார்.

மனைவியைப் பிரிந்த அவர் திடீரென பத்மலட்சுமியுடன் சுற்றி வர ஆரம்பித்தார்.

இதையடுத்து பத்மலட்சுமி சர்வதேச அளவில் பிரபலமானார்.

சென்னையில் பிறந்த லட்சுமியின் குடும்பம் இளம் வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறிவிட்டது.

பத்மலட்சுமியைப் பிரிந்ததால் 55 வயதான ருஷ்டி மிகவும் மனச் சோர்வுடன் இருப்பதாக லண்டனைச் சேர்ந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Padma Lakshmiதமிழ், ஆங்கிலம் உள்பட 5 மொழிகள் பேசத் தெரிந்த பத்மலட்சுமி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

ருஷ்டியும் லட்சுமியும் நியூயார்க்கிலும் லண்டனிலும் மாறி மாறி வசித்து வந்தனர். இப்போது அந்த உறவு முறிந்துவிட்டது.

சர்வதேச பத்திரிக்கைகளில் தென் இந்திய, ஸ்பானிஷ் சமையல் குறிப்புகள் எழுதி வருகிறார் பத்மலட்சுமி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+