செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம்: ஜி.கே. மணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரத்தில் நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டபா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட 42 பேர் மீதும் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிதலைமையின குழுவினரை பதவியேற்க விடாமல் பாமவினர் தடுத்தனர்.
வன்னியர் தவிர வேறு ஜாதியினர் யாரும் இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கக் கூடாது என்று கூறி மணியும், பாமகஎம்.எல்.ஏவான காடு வெட்டி குருவும் தகராறு செய்தனர். மேலும் நீதிபதியை கேவலமாகவும் பேசினர்.அவர்களுடன் இருந்த பிற பாமகவினர் நீதிபதியை தாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து தகராறு செய்த பா.ம.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வேப்பேரி காவல் நிலையத்துக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 42 பாமகவினர் மீதுகுற்றம் சாட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்ட நிலையில் மணியும், காடுவெட்டி குருவும்மட்டும் சில நாட்கள் தலைமறைவாக இருந்து பின்னர் சரணடைந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மணிக்குபின்னர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் தற்போது வெளியில்தான் உள்ளார்.
இந்நிலையில் மணி உள்ளிட்ட குற்றம் சாட்டபபட்ட 42 பேர் மீதும் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
வேப்பேரி காவல் நிலையப் போலீசார் இந்தக் குற்றப்பத்திரிக்கையை சென்னை-எழும்பூர் 6வது குற்றவியல்நீதிமன்றத்தில் நீதிபதி சாம்பசிவம் முன் தாக்கல் செய்தனர். இருப்பினும் குற்றப்பத்திரிக்கையின் நகல்கள்அவர்களிடம் வழங்கப்படவில்லை.
ஆயுதங்களுடன் வருதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி போன்ற ஏழுபிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் பத்திரிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 42 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கின்அடுத்தகட்ட விசாரணை மார்ச் 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->