For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் நெரிசலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

மினா:

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 புனித யாத்ரீகர்கள் பலியாயினர். இதில் மூன்று பேர்இந்தியர்களாவர்.

ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்ச்சியான சாத்தான் (தூண்கள்) மீது கல் எறியும் நிகழ்ச்சி நேற்று மினாவில் நடந்தது. அப்போது அங்குலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் கூடினர். இதில் ஒரு குழிவினர் கல் எறிந்துவிட்டுத் திரும்பினர். இதையடுத்து அடுத்த குழு அப் பகுதிக்குள்நுழைந்தது.

ஒவ்வொரு குழுவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில்சிக்கி 14 பேர் இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

இறந்த இந்தியர்களில் 2 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. ஒருவர் சாந்த் பீ. இன்னொருவர் சர்பார் பத்மி.

கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் திரண்டிருந்ததால் அப் பகுதியில் சாலைகள், மேம்பாலங்கள் அனைத்தும் நிரம்பி வழித்தன. வாகனங்கள் செல்லவழியே இல்லை. இதனால் சம்பவம் நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியவில்லை.

மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் இருந்தும் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு ஜன நெருக்கடி இருந்தது.இதனால் ஹெலிகாப்டர்களைக் கொண்டு தான் கண்காணப்புப் பணி நடந்தது.

இந்த கல் எறியும் நிகழ்ச்சி மேலும் இரு நாட்களுக்கு நடக்கும். நேற்றைய சம்பவத்தையடுத்து சாத்தான்களை அடாையளமாகக் கொண்ட 3தூண்களின் அருகிலும் 8 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபிய அரசு தொடர்ந்து வசதிகளை அதிகரித்து வந்தாலும் கூட யாத்ரீகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல மடங்குஅதிகரித்து வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X