காதல் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள்
சென்னை:
மனைவியை கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது.
சென்னை பாடி குமரன்நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இருவரும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் கொண்ட ரகுநாதன் வீட்டுச் செலவுகளுக்குப் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். பணம் கேட்டால்மனைவியை அடித்து, உதைத்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வீட்டுச் செலவுக்காக ரூ.20 பணத்தைக் கொடுத்துள்ளார்ரகுநாதன். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்டுள்ளார் சாமுண்டீஸ்வரி.
இதனால் கோபமடைந்த ரகுநாதன் மனைவியை சரமாரியாக அடித்துள்ளார். ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.இதனால் வெறுப்படைந்த சாமுண்டீஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டார். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
நீ என்ன தற்கொலை செய்வது, நானே உன்னைக் கொன்று விடுகிறேன் என்று கூறிய ரகுநாதன், தீக்குச்சியைப்பற்றவைத்து மனைவி மீது வீசினார்.
இதனால் உடலில் தீப் பிடித்துக் கொண்ட சாமுண்டீஸ்வரி கருகினார்.
உடனடியாக அண்டை வீட்டினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குஅவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர்தான் தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறினார்.
இதையடுத்து ரகுநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி விமலா சாமுண்டீஸ்வரியின் மரண வாக்குமூலத்தையும் போலீஸ்விசாரணையையும் அடிப்படையாக வைத்து ரகுநாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
-->