ஜெ. பிறந்த நாள்: தேர்தல் கமிஷனுக்கு இளங்கோவன் எச்சரிக்கை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தன் பிறந்த நாளின்போது மக்களுக்கு உதவிகளை வழங்குங்கள் என்று அதிமுகவினரிடம்அவர் கூறியுள்ளதை தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இளங்கோவன் விடுத்துள்ள அறிக்யிைல்,
தன் பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றுஅதிமுகவினருக்கு ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
இதன் மூலம் சாத்தான்குளத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில் தேர்தல் விதிமுறைகளை மீறி உதவி என்றபெயரில் நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்த அதிமுகவினர் முயலுவார்கள்.
ஈரோடு, திருப்பூரிலிருந்து வாங்கிக் குவித்துள்ள துணிமணிகளை சாத்தான்குளம் வாக்காளர்களிடையேவிநியோகிக்கவும் அவர்கள் முயற்சிக்கலாம்.
எனவே ஜெயலலிதா பிறந்தநாளின்போது, தேர்தல் கமிஷன் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.
-->