For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்த உள்ளாடைகள்: மலேசிய தமிழர், பெண் உள்பட 4 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காந்தப் படுக்கை மோசடி அடங்குவதற்குள் மற்றொரு காந்த மோசடி அம்பலமாகியுள்ளது. போலி காந்தஉள்ளாடைகளை விற்பனை செய்தது தொடர்பாக மலேசியத் தமிழர், பெண் உள்பட 4 பேரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்தவர் தசரதராஜ். இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். காந்தத்தால் ஆன பிரா,ஜட்டி, பெல்ட் ஆகியவற்றை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தார்.

இதை நம்பிய ஏராளமான மக்கள் இந்தப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கினர். மருத்துவ குணம்கொண்டதாகக் கூறப்பட்டதால், இந்த உள்ளாடைகள் அதிக அளவில் விற்பனை ஆகின.

இந்நிலையில் சமீபத்தில் காந்தப் படுக்கை மோசடி குறித்த செய்திகள் வெளியாயின. இது தொடர்பான போலீஸ்விசாரணையின்போதுதான் போலீசாருக்கு தசரதராஜின் காந்த உள்ளாடைகள் நிறுவனம் குறித்துத் தகவல்கிடைத்தது.

இதையடுத்து சென்னை-தி. நகரில் உள்ள அவருடைய நிறுவனத்தில் குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோதுதான் குட்டு வெளிப்பட்டது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட காந்த உள்ளாடைகள் அனைத்தும்போலியானவை என்பதும் தெரிய வந்தது.

அவற்றில் காந்த சக்தியும் இல்லை, மருத்துவ குணமும் இல்லை என்றும் தெரிய வந்தது. இந்திய மருத்துவக்கவுன்சிலின் சான்றிதழோ அல்லது மலேசிய மருத்துவக் கவுன்சிலின் சான்றிதழோ இல்லாமலேயே தசரதராஜ் இந்தமோசடியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அவர் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தசரதராஜ், பூவன், உமா சரவணன் மற்றும் ஷோபனா பீட்டர் என்ற பெண் ஆகிய நான்கு பேர்கைது செய்யப்பட்டனர். அந்த நிறுவனத்தில் இருந்த ஏராளமான காந்த உள்ளாடைகளையும் போலீசார்கைப்பற்றினர்.

இது தொடர்பாக மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X