மேட்டூர் அணையை நிரப்புவதாக "புருடா" விட்ட போலி சாமியார் "எஸ்கேப்"
மேட்டூர்:
தனது தவ வலிமையால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மேட்டூர் அணை நிரம்பி வழியும் வரை மேட்டூரைவிட்டு செல்லமாட்டேன் என்று கூறி வந்த சென்னை நகரைச் சேர்ந்த சாமியார் தனது தவம் பலிக்காததால்மேட்டூரைக் காலி செய்துவிட்டு எங்கோ ஓடிவிட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் ரத்தின சபாபதி சுவாமிகள். இவர் தன் மனைவியோடு கடந்த ஜனவரி 18ம் தேதிமேட்டூர் வந்தார். தான் தவம் செய்யப் போவதாகவும், தனது தவ வலிமையால் மேட்டூர் அணை நிரம்பி வழியும்என்றும் தனக்கு தவம் செய்ய மேட்டூர் அணையில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு அரசு அனுமதி தரவில்லை. இதையடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிதனது தவத்தைத் தொடங்கினார் சுவாமிகள். ஜனவரி 23ம் தேதி மேட்டூர் அணை நிரம்பி வழியும் என்று நாளையும்குறிப்பிட்டு அவர் சொன்னார்.
இதனால் மேட்டூர் மக்களிடையே பெரும் ஆவலும் பரபரப்பும் ஏற்பட்டது. சுற்றுப் பகுதிகளில் உள்ளகிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுவாமிகளைத் தரிசிக்க மேட்டூர் வந்தனர்.
இந்நிலையில் ஜனவரி 23ம் தேதி வந்தது. ஆனால் மழைதான் வரவில்லை. தான் குடியிருக்கும் வீடு சரியில்லைஎன்று கூறிய சுவாமிகள், 24ம் தேதி வேறு வீட்டுக்கு மாறினார். அப்போதும் மழையைக் காணோம்.
இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மேட்டூரில் லேசான மழை பெய்தது. அவ்வளவுதான், இதற்குக் காரணம்சுவாமிகள்தான் என்று அவரது உதவியாளர் வேங்கை அய்யனார் அறிக்கை விட்டார்.
ஆனால் மேட்டூரில் மட்டுமல்லாது சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அன்று அதே நேரத்தில் லேசானமழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்தனர். இதனால் சுவாமிகளின் வாதம்செல்லவில்லை.
இந்தச் சூழ்நிலையில் திடீரென்று அந்த சுவாமிகளைக் காணவில்லை. அவர் தன் குழுவினருடன் மேட்டூரை விட்டேசென்றுவிட்டதாகத் தெரிகிறது. அவர் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதால் அவரைத் தேடும் பணியைபோலீஸாரும் மேற்கொள்ளவில்லை.
மழைவரும், மழைவரும் என்று கூறி தங்களை சுவாமிகள் ஏமாற்றி விட்டதாக மேட்டூர் மக்கள் தங்களுக்குள்ளேயேகூறிப் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
-->