For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நதிகள் இணைப்புப் பணி 2004ல் தொடங்கும்

By Staff
Google Oneindia Tamil News

புனே:

நாட்டின் அனைத்து தேசிய நதிகளையும் இணைக்கும் பணி 2004ம் ஆண்டில் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள நதிகள் இணைப்பு திட்டப் பணிக் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபு புனேவில் நிருபர்களிடம்பேசுகையில்,

நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு எந்த மாநில அரசும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நதிகளை இணைப்பது சாத்தியமா என்பது குறித்தஆய்வு முடியும் நிலையில் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் இது சாத்தியமே என்று தெரியவந்துள்ளது.

அனைத்துக் கட்சிகளும், மாநில அரசுகளும் இந்த இணைப்புத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இத் திட்டத்தால் சுற்றுச் சூழலுக்கும்எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.

இத் திட்டம் தொடர்பாக செயற்கைக் கோள் மூலமான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நதிகள் இணைப்புக்கு பணம் பிரச்சனையாகஇருக்காது. கடன், சிறப்பு வரிகள், மற்றும் பிற கட்டணங்கள் மூலம் இத் திட்டத்துகான நிதியைத் திரட்டிவிட முடியும். இத் திட்டத்தை 15வருடங்களில் நிறைவேற்றிவிடலாம் என்றார் சுரேஷ் பிரபு.

சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபு மத்திய மின்துறை அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பால் தாக்கரே வாஜ்பாய்க்கு உத்தரவிட்டார்.

சுரேஷ் பிரபுவை இழக்க விரும்பாத வாஜ்பாய் அவரிடம் நதிகள் இணைப்புத் திட்டப் பணியைக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு மக்கள் இயக்கம் தொடங்குவேன், ரூ. 1 கோடி தருவேன் என்று உறுதியளித்த நடிகர் ரஜினிதனது உறுதிமொழிகளை வாபஸ் பெற்றுவிட்டார். காவிரி பிரச்சனை உச்சத்தை அடைந்து இருப்பதால் மீண்டும் தனக்கு ஏதாவது சிக்கல்வருவதைத் தவிர்க்க மலேசியா சென்றுவிட்டார். அவர் சென்னை திரும்ப ஒரு மாதத்துக்கும் மேலாகும்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X