For Daily Alerts
Just In
கோவை பெண் நீதிபதிக்கு "இந்து தொண்டர்கள்" அமைப்பு மிரட்டல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பெண் நீதிபதிக்கு "இந்து தொண்டர்கள்" என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவரைக் குற்றவாளி என தீர்ப்பளித்தார் கோயம்புத்தூர் முதலாவது நீதிமன்ற நீதிபதிஸ்ரீதேவி.
இந்நிலையில் அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் பா.ஜ.க.தலைவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "இப்படிக்கு, இந்து தொண்டர்கள்" என்றும் கடிதத்தின் முடிவில் எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் வந்த போது நீதிபதி ஸ்ரீதேவி ஊரில் இல்லாததைத் தொடர்ந்து, நீதிமன்ற அலுவலக ஊழியர்கள்அதைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை எழுதியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
Comments
Story first published: Friday, February 14, 2003, 5:30 [IST]