For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் நீதிபதியை தாக்கிய வழக்கு: 4 வக்கீல்களுக்கு ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

பெண் நீதிபதியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வக்கீல்களுக்கும்நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சமீபத்தில் திடீர் தாக்குதல் நடந்தது. இதில்வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்கியதாக நீதிபதி விஜயலட்சுமி போலீஸில் புகார்கொடுத்தார்.

அவரது புகாரின் பேரில் முருகேசன், சுபாஷ்குமார், சுப்பிரமணியம் மற்றும் முகமது மைதீன் ஆகியநான்கு வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைக் கண்டித்து நேற்று சென்னையைத் தவிர தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் உள்ள சுமார்36,000 வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டிருந்த நான்கு வக்கீல்களும் தங்களை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று கோரி நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

அம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கருப்பையா நான்கு வக்கீல்களையும் சொந்த ஜாமீனில்விடுவிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் தங்கள்போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆனால் பூதப்பாண்டி நீதிபதி விஜயலட்சுமியைஇடமாற்றம் செய்யும் வரை அங்குள்ள நீதிமன்ற வக்கீல்கள் தொடர்ந்து பணிப்புறக்கணிப்புபோராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X