அத்துமீறி நுழைந்த ராணுவ வீரரை சுட்டு கொன்ற புலிகள்
கொழும்பு:
தங்களது கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கிரனைட் வெடிகுண்டை வீசித் தாக்குதல் நடந்த முயன்றஇலங்கை ராணுவ வீரரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தாலும் அதை அதிபர் சந்திரிகாவும், ராணுவமும்முழுமையாக ஏற்கவில்லை. அவ்வப்போது ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள்தொடர்ந்தவண்ணமே உள்ளன.
சமீபத்தில் விமான எதிர்ப்பு பீரங்கிகளுடன் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்ட 3 புலிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதே போல யாழ்பாணத்திலேயே ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நுழைந்த பெண்புலிகளிடம் பெல்ட்களை கழற்றச் சொல்லி ராணுவ வீரர்கள் அத்துமீறி நடந்து கொணடனர். இதற்கு நார்வே மற்றும்புலிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந் நிலையில் நேற்றிரவு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்பாணத்தின் கிலாலி பகுதிக்குள் ஒரு ராணுவ வீரர்அத்துமீறி நுழைந்தார். அவரை புலிகள் சுற்றி வளைத்தபோது கையில் இருந்த கிரனைட் குண்டை வீசித் தாக்குதல்நடத்த முயன்றார்.
இதையடுத்து புலிகள் அவரை சுட்டு வீழ்த்தினர். வீரரின் உடலை புலிகள் ரெட்கிராஸ் அமைப்பின் மூலம்ராணுவத்திடம் ஒப்படைக்க புலிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த வீரருடன் வந்த மேலும் 2 ராணுவத்தினர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிகிறது.
புலிகளின் பகுதிக்குள் நடந்த இச் சம்பவம் குறித்து ராணுவம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
கடந்த 7 மாதங்களுக்கு முன் இதே கிலாலி பகுதியில் நுழைந்த ஒரு ராணுவ வீரர் தனது ஆட்டோமேடிக்துப்பாக்கியில் கண்மூடித்தனமாக பொது மக்களை நோக்கிச் சுட்டார். இதையடுத்து அவரை புலிகள் சுட்டுக்கொன்றனர்.
இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள ராணுவ முகாமில் இருந்து வரும்இந்த வீரர்கள் தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திவிட்டு ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications