For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலர் தினம்: கல்லூரி மாணவர்களின் ரெளடித்தனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காதலர் தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரிமாணவர்களுக்கிடையே பெரும் மோதல் வெடித்தது.

ராயப்பேட்டை நியூ கல்லூரியில் படிப்பவர் சந்தோஷ் கபூர். காதலர் தினத்தன்று நுங்கம்பாக்கம்பகுதியில் உள்ள கடையில் இவர் தன் காதலியுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் மாணவர்கள் அங்கு வந்தனர். ரெளடிக்கும்பல் போல செயல்பட்ட அவர்கள் அங்கிருந்த பெண்களிடம் வலியச் சென்று கை கொடுத்துகாதலர் தின வாழ்த்துக்களைக் கூறினர்.

இதனால் பல பெண்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். அவர்களைப் பார்த்து மோசமானவார்த்தைகளால் கமெண்ட் செய்த மாணவர்கள் அடுத்ததாக சந்தோஷ் கபூர் மற்றும் அவரதுகாதலிடம் வந்தனர்.

கபூரின் காதலியிடம் கை குலுக்க முயன்றனர். இதை அந்தப் பெண் தவிர்த்தார். ஆனாலும்,விடாமல் கையைப் பிடித்து இழுக்கவே கபூர் அவர்களைத் தடுத்தார்.

இதையடுத்து கபூரையும் அந்தப் பெண்ணையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியமாணவர்கள் அவர்களைத் தாக்கினர். கபூரை அந்த மாணவர்கள் அடித்து உதைத்தனர்.

இதில் கபூர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவரைத் தாக்கிய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைதாதலாம் என்றுதெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X