For Daily Alerts
Just In
கள்ளத்தோணியில் இலங்கை திரும்பிய 9 அகதிகள்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பெருமாள்புரம் அகதிகள் முகாமிலிருந்து 9 இலங்கைத்தமிழர்கள் யாருக்கும் தெரியாமல் நாடு திரும்பியுள்ளனர்.
இனக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழர்களில் 2000 பேர் குமரிமாவட்டத்தில் பெருமாள்புரம், களியக்காவிளை, களிவிளை, நாராயணன்விளை ஆகிய பகுதிகளில்அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை சில நாட்களாகக் காணவில்லை. இது குறித்து நடத்தப்பட்டவிசாரணையில் அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்குசென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
-->
Comments
Story first published: Sunday, February 16, 2003, 5:30 [IST]