பெண் புலிகள் கைதை கண்டித்து இலங்கையில் ஸ்டிரைக்
கொழும்பு:
பெண்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர வற்புறுத்தியதாகக் கூறி 2 பெண் புலிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதைக கண்டித்து திரிகோணமலையில் இன்று ஒருநாள்கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
புலிகள் இயக்கத்தில் சிறார்கள் சேர்க்கப்படுவதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அடிக்கடிபுலிகளைக் குற்றம் சாட்டி வந்தார். கடந்த 7ம் தேதி தொடங்கி ஜெர்மனியில் இரண்டு நாட்கள்நடைபெற்ற ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்சனை குறித்துமுக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அப்போது சிறார்களை இனி தங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று புலிகளும் உறுதிஅளித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 14 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்களைக் கடத்தி, தங்கள்இயக்கத்தில் சேருமாறு கூறி வற்புறுத்தியதாக இரண்டு பெண் புலிகளை இலங்கைப் போலீசார் கைதுசெய்தனர்.
இந்தக் கைதைக் கண்டித்து திரிகோணமலையில் இன்று முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.அங்கு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. சிங்களர்கள் நடத்தி வரும் பள்ளிகளைத் தவிரஅனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்படவில்லை. சாலைகளில் வாகன நடமாட்டமும் முற்றிலும்ஸ்தம்பித்துப் போனது.
பெண் புலிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை என புலிகள் இயக்கம் கூறியுள்ளது.