அயோத்தி: 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சர்ச்சைக்குரிய மனு மீதானவிசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த வழக்குவிசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் நடத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட உடன் சர்ச்சைக்குள்ளான 2.7 ஏக்கர் நிலத்தை மத்தியஅரசு கையகப்படுத்தியது. பின்னர் 1994ம் ஆண்டில் அதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உச்சநீதிமன்றம் கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மத்திய படைகளின் பாதுகாப்பில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது இந்த 67 ஏக்கர் நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் கேட்பதால் அதை வழங்க பா.ஜ.க. அரசுமுடிவு செய்துள்ளது.
இதனால், கையகப்படுத்திய நிலத்தை விடுவிக்குமாறும், அந்த இடத்தில் பூஜைகள் நடத்தவிதிக்கப்பட்ட இடைக் காலத் தடையை நீக்கக் கோரியும் ஒரு மனுவை பா.ஜ.க. அரசு தாக்கல்செய்தது. மேலும் இந்த மனுவை பிப்ரவரி 21ம் (இன்றுக்குள்) தேதிக்குள் விசாரிக்குமாறும்கோரியது.
21ம் தேதிக்குள் நிலத்தைத் தர வேண்டும் என வி.எச்.பி. கெடு விதித்ததால் இந்தக் கோரிக்கையைமத்திய அரசு முன் வைத்தது. ஆனால், யாரது கெடுவுக்கும் பணிய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இன்று இந்த மனுவை எடுத்துக் கொண்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம் பெஞ்ச் இந்தவழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
6ம் தேதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும். அன்ரைய தினம் இந்த நிலத்தில் பூஜை நடத்தஅனுமதிக்கலாமா என்பது குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்துவர். இதன் பின்னர் நிலத்தை வி.எச்.பியிடம்வழங்கலாமா என்பது குறித்த விசாரணை நடக்கும்.
கடந்த ஆண்டு இந்த நிலத்தில் பூஜை நடத்தப் போவதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவித்துகூட்டம் கூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் மதக் கலவரம் வெடிக்கும் நிலைஏற்பட்டது. இதையடுத்து இங்கு எந்தவிதமான பூஜையும் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் தான் நிலத்தையே வி.எச்.பியிடம் தர மத்திய அரசு முயன்று வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என பாபர் மசூதி கமிட்டி கோரிக்கை விடுத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சாதுக்கள் மாநாடு: வி.எச்.பி. தீவிரம்
இந் நிலையில் சாதுக்கள் மாநாட்டை நடத்துவதில் விஸ்வ ஹிந்து பரிஷத் தீவிரமாக உள்ளது. இந்த மாநாட்டில்ராமர் கோவில் கட்டுவதற்கான நாள் அறிவிக்கப்படும் என வி.எச்.பி. கூறியுள்ளது.
இதற்கிடையே சாதுக்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை டெல்லிஉயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
67 ஏக்கர் நிலத்தை தங்களிடம் தராவிட்டால் தேசிய அளவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என வி.எச்.பி.எச்சரித்துள்ளது. 11 மாதங்களுக்கு முன் இதே போன்ற ஒரு சூழ்நிலை உருவானது. முதலில் நிலம் கேட்ட வி.எச்.பி.பின்னர் இறங்கி வந்து பூஜை நடத்த அனுமதி கேட்டது.
அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் மூலம் வி.எச்.பியை சமாதானம் செய்த பிரதமர் வாஜ்பாய் பூஜையைவேறிடத்தில் நடத்தவும், ஒரு ஊர்வலம் மட்டும் அயோத்தியை நோக்கி நடத்தவும் ஒப்புக் கொள்ள வைத்தார். இம்முறை என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications