சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் தீவிரம்
சென்னை:
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மார்ச் 1ம் தேதி தென்னாப்பிரிக்காவில்நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பெட்டிங் போன்ற சூதாட்டத்தில்ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டை வைத்து நாடு முழுவதும் பெருமளவில் சூதாட்டம் நடந்துவருகிறது. பெரும்பாலும் மார்வாடிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல நூறு கோடிரூபாய்கள் புழங்குவதாகக் கூறப்படுகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகர்களில் 50க்கும்மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மார்வாடிகள் நிறைந்த சென்னை செளகார்பேட்டை பகுதியிலும் கிரிக்கெட் சூதாட்டம்கொடி கட்டிப் பறந்து வருகிறது. சூதாட்டம் நடத்திய சிலரை போலீசார் பிடித்துள்ளனர்.அவர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசிகள், கம்ப்யூட்டர், டி.வி. உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மார்ச் 1ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும்மோதுகின்றன. இதனால் சூதாட்டம் விரைவில் சூடு பிடிக்கும் என்று போலீஸார் கருதுகிறார்கள்.தையடுத்து செளகார்பேட்டை தவிர பூக்கடை உள்ளிட்ட வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சூதாட்டத்தில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜயகுமார் கடுமையாகஎச்சரித்துள்ளார்.
-->












Click it and Unblock the Notifications