படித்தும் பட்டம் கிடைக்காத பல் டாக்டர்கள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தங்கள் கல்லூரிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாததைக் கண்டித்து தாய் மூகாம்பிகை பல்மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.

சென்னையை அடுத்த முகப்பேறு பகுதியில் உள்ளது தாய் மூகாம்பிகை பல் மருத்தவக் கல்லூரி.

இந்தக் கல்லூரி துவங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதற்கு உரிய அங்கீகாரம்கிடைக்கவில்லை என்று கூறி கடந்த 10 நாட்களாக அதன் மாணவ, மாணவிகள் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உரிய அங்கீகாரம் கிடைக்காததால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை முடித்த 98 மாணவ,மாணவிகள் இன்னும் டிகிரி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை-சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையின் முன்பாக இக்கல்லூரியைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திடம் எத்தனையோ முறை புகார் அளித்தபின்னரும் கூட உரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று ஒரு மாணவிசோகத்துடன் கூறினார்.

இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் உரிய பலன் கிடைக்கா விட்டால், அடுத்துஎம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப் போவதாக மாணவ, மாணவிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே படித்து முடித்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் பட்டம் கிடைக்காத 98மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக டாக்டர் பட்ட சான்றிதழ்களை வழங்க எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி தாய் மூகாம்பிகை கல்லூரி சார்பிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+