இந்தியரின் சூட்கேசில் பாகிஸ்தான் வாலிபர்!!
பெய்ஜிங்:
பாகிஸ்தானைச் சேர்ந்த வாலிபரை பெரிய சூட்கேஸில் வைத்து ஹாங்காங்கிற்குள் கொண்டு வந்த இந்தியருக்குசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 6ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த பிரதீப் சிங் சீனா வழியாக ஹாங்காங் வந்தார். மிகப் பெரியசூட்கேஸையும் அவர் எடுத்து வந்தார். சுற்றுலா வந்ததாகக் கூறிக் கொண்டு மிகப் பெரிய பெட்டியைக் கொண்டுவந்ததால் அவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரைத் தனியே அழைத்துச் சென்றனர். அப்போது பெட்டி தன்னுடையது அல்ல என சிங் கூறினார்.இதையடுத்து பெட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் ஒரு வாலிபர் சுருண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம்விசாரணை நடத்தியபோது அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ராஜா கம்ரான் (24 வயது)என்றும் தெரியவந்தது.
ஹாங்காஙங்கில் நுழைய எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் கம்ரானை சட்டவிரோதமாக உள்ளே கொண்டுவந்துள்ளார் சிங்.
இதையடுத்து அவர் மீது ஹாங்காங் அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இப்போது அவருக்கு 16 மாதசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு டூட்டி பிரி ஷாப்பில் தன்னைச் சந்தித்த ஒரு இந்திய நண்பர் தான் தன்னிடம் இந்தப் பெட்டியைத்தந்ததாகவும் அதில் செல்போன்கள் இருப்பதாக நம்பி அதை வாங்கி வந்ததாகவும், அதில் ஒரு ஆள் இருந்ததுதெரியாது என்றும் சிங் நீதிபதியிடம் கூறினார்.
சிங்கின் இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
-->