""மக்கள் போலீசாரானால் பொடிப் பொடி ஆவீர்கள்"": ஜெ.க்கு கருணாநிதி சாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின்சாரத் திருட்டு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி பகுதி திமுக செயலாளர் சுரேஷ் குமார்கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பினால் அவருக்குத் தனது தலைமையிலேயேபிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:

சிந்தாதிரிப்பேட்டையில் திராவிடர் இயக்கம் தோன்றியதன் 90வது ஆண்டு விழாவை நாம் பொதுக்கூட்டம் போட்டுக் கொண்டாடினோம்.

அந்தக் கூட்டம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றதைப் பொறுக்க முடியாமல், அதிக அளவில்மக்கள் வெள்ளமென திரண்டு வந்ததைக் காணச் சகிக்க முடியாமல் ஆட்சியாளர்கள் மின்சாரத்தைதிருட்டுத் தனமாக நாம் எடுத்துப் பயன்படுத்தியதாகக் கூறி சுரேஷ்குமார் மீது பொய் வழக்கு ஒன்றைஜோடித்துள்ளனர்.

வழக்குப் போட்டு விட்டதற்காக திமுகவினர் யாரும் இப்போது பயப்படுவதில்லை. தம்பி பரிதிஇளம்வழுதி மீதும் வழக்கு போடப்பட்டது. அவரும் சிறை சென்று வந்தார். அவரைப்பாராட்டினோம்.

அதுபோலவே சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தால் அவரையும்பாராட்டுவோம். என் தலைமையிலேயே அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு விழாநடத்துவோம்.

யாராவது சிறைக்குச் சென்று திரும்புகிறார்களா? அவர்களை வருக, வருக என்று பாராட்டிவரவேற்கும் பக்குவத்தில்தான் திமுகவினர் இப்போது இருக்கிறார்கள்.

ஓமந்தூரார் முதல் எம்.ஜி.ஆர். வரை நானும் எத்தனையோ முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜெயலலிதா அளவுக்கு யாரும் வாய்க் கொழுப்போடு பேசியதே இல்லை.

என்னை ஒரு மண்டு என்றும் மக்கு மாணவன் என்றும் ஜெயலலிதா பேசியுள்ளார். நான் யோசித்துப்பார்த்தேன். சில நாட்களுக்கு முன் ஒரு கடிதத்தில் "அன்புள்ள சகோதரி ஜெயலலிதாவுக்கு" என்றுஎழுதியிருந்தேன். "என்னைப் போய் சகோதரி என்று சொல்கிறானே, சரியான மண்டு" என்று அவர்சொன்னதாகவே நான் கருதிக் கொண்டேன்.

பெண், பெண் போலீஸ் என்று ஜெயலலிதா பெருமையாகக் கூறிக் கொண்டுள்ளார். ஆனால்தமிழகத்தில் முதல் முறையாகப் பெண் காவலர்களை அறிமுகம் செய்தது திமுக ஆட்சிதான் என்பதையாரும் மறந்துவிடக் கூடாது.

அதேபோல, போலீஸாருக்கு பல்வேறு சலுகைகளைக் கொடுத்தது, நல வாரியங்கள் அமைத்ததுஅனைத்தும் திமுக ஆட்சியில்தான். அதிலும் நான் முதல்வராக இருந்தபோதுதான்.

போலீஸ், போலீஸ் என்று பேசி அந்தத் துறையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு போலீஸ்ராஜ்ஜியம் நடத்தலாம் என்று நினைக்கின்றனர். அப்படி நடத்த முடியாது. பொதுமக்கள் அனைவரும்ஒருநாள் போலீசாராக மாறினால் உங்கள் போலீஸ் ராஜ்ஜியம் பொடிப் பொடியாக மாறி விடும்என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் கருணாநிதி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+