For Quick Alerts
For Daily Alerts
Just In
சாத்தான்குளம்: யாருக்கும் ஆதரவில்லை- சு. சுவாமி அதிரடி முடிவு
சென்னை:
சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ ஆதரவு தரப் போவதில்லை என்றுஅதிரடி அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரியிலிருந்து தண்ணீர், முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்திற்குரிய தண்ணீரைப்பெற்றுத் தர ஜெயலலிதா அரசு தவறி விட்டது. எனவே சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவு தரமாட்டோம்.
அதே போல, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தும் அந்த மாநில முதல்வருடன் பேசிதமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத் தர தவறி விட்டது தமிழக காங்கிரஸ் கட்சி.எனவே அந்தக் கட்சிக்கும் ஆதரவு தர மாட்டோம்.
ஒரு சுயேச்சை வேட்பாளருக்காவது ஆதரவு தந்தாலும் தருவோமே தவிர வேறு யாருக்கும் அங்குஆதரவு தரப் போவதில்லை என்று கூறினார் சுவாமி.
-->
Comments
Story first published: Friday, February 21, 2003, 5:30 [IST]