தமிழை 2வது மொழியாக்க விரும்பவில்லை: காளிமுத்து
மயிலாடுதுறை:
தமிழ் எப்போதும் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் 2வது மொழியாக இருக்கக் கூடாதுஎன்றும் முதல்வர் ஜெயலலிதா விரும்பும் காரணத்தால்தான் ஆளுநர் உரை தமிழாக்கம்செய்யப்படவில்லை என்று சபாநாயகர் காளிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் தமிழக சட்டசபை கூடியபோது ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது.ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பின்னர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவாசிக்கப்படவில்லை.
இதை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையாகக் கண்டித்தன. ஆளுநர் உரையைத்தமிழில் படிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும்,நேரமில்லாத காரணத்தால்தான் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கப்படவில்லை என்றும் அதிமுக அரசுஇதற்குப் பல காரணங்களைக் கூறி வந்தது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டகாளிமுத்து பேசுகையில்,
தமிழ் எங்கும், எப்போதும் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்பதையே முதல்வர் ஜெயலலிதாமுக்கிய கொள்கையாக வைத்துள்ளார்.
கோவில், நீதிமன்றங்கள் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் முதல் மொழியாக, ஆட்சி மொழியாகஇருக்க வேண்டும் என்பதையே முதல்வர் விரும்புகிறார்.
இதன் பொருட்டே ஆளுநர் உரை ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால், அதன் தமிழாக்கத்தை படித்துநம் தாய் மொழியை இரண்டாவது மொழியாக்க வேண்டாம் என்ற நோக்கில்தான் அதைத் தமிழில்மொழிபெயர்த்து படிக்கவில்லை.
தமிழ் தெரிந்த ஆளுநர் பதவியில் இருக்கும் பட்சத்தில், ஆளுநர் உரை ஆங்கிலத்தில் இல்லாமல்தமிழிலேயே இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் காளிமுத்து.
-->












Click it and Unblock the Notifications