சென்னையில் வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர மக்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் வீடு தேடி வரப் போகின்றன.
ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனமான (IRCTC) இந்த சேவையை வழங்கப் போகிறது.
ரயில்வே இணையத் தளத்தில் கிரெடிட் கார்ட் மூலமாக ஆன்-லைனில் டிக்கெட் வாங்கினால் அதை நீங்கள்சொல்லும் இடத்திலேயே வந்து டெலிவரி செய்யப் போகிறது தென்னக ரயில்வே.
இதற்காக கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்ய உள்ளது. கூரியர் கட்டணத்தையும் டிக்கெட்டுடன் சேர்த்துரயில்வே வசூலிக்கும். டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே இத் திட்டம் அமலுக்குவந்துவிட்டது.
இப்போது சென்னையிலும் இத் திட்டம் அமலுக்கு வருகிறது. மேலும் விவரங்கள் வேண்டுவோர்http://www.irctc.co.in என்ற இணையத் தளத்தை நாடலாம்.
-->












Click it and Unblock the Notifications