புலிகளிடம் அடிபணியவில்லை: சந்திரிகாவுக்கு ரணில் சூடு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே அவர்களிடம் இலங்கை அரசுஅடிபணிந்து போய் விட்டதாக நினைப்பது தவறு என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியுள்ளார்.
ரணில் தலையிலான இலங்கை அரசு புலிகளிடம் அடிபணிந்து விட்டதாக அந்நாட்டு அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ரணில்கூறுகையில்,
புலிகளிடம் நாங்கள் மண்டியிட்டு சரணடைந்து விட்டதாக சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதுதவறு. நாங்கள் புலிகளிடம் மண்டியிடவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே நாங்கள் புலிகளிடம் அடிபணிந்து போய் விட்டதாகநினைப்பது சரியா?
இப்போதைக்கு புலிகளுடன் பேச்சு நடத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. பேச்சுநடத்துவது தவறு என்றால் மீண்டும் போருக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறார்களா?
பேச்சுவார்த்தைக்கு தனியாகச் செல்லும் நிலையிலும் நாங்கள் இல்லை. பல உலக நாடுகள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் கூட தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தையை வரவேற்கின்றன. அவர்கள் என்ன போருக்கா ஆதரவு அளிக்கிறார்கள்?அமைதிக்குதானே? அதில் என்ன தவறு?
இலங்கையில் முழு அமைதி திரும்புவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் உறுதியான, இறுதியானவாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம். அப்படிப்பட்ட அமைதிப் பேச்சு தவிர வேறு ஏதாவதுஉருப்படியான வழி இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை எதிர்ப்பவர்கள் தெளிவாகக் கூறலாம்,கூற வேண்டும்.
கடந்த ஆண்டு நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன் பல வழிகளிலும் பிரச்சனைகள்இருக்கத்தான் செய்தன. நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு புலிகள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி கூடஎழுந்தது.
ஆனால் உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தங்கள்நாட்டிற்குத் திரும்பி வந்து வாழ்வதற்காக பல உலக நாடுகளும் நிதி உதவி செய்ய முன் வந்ததைத்தொடர்ந்து, புலிகளே நிரந்தரப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்தனர். இதுவே அவர்களுடையபெருந்தன்மையையும் கண்ணியத்தையும் காட்டுகிறது அல்லவா என்றார் ரணில்.
இதற்கிடையே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டுநிறைவடைவதையொட்டி நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதை மக்கள் கொண்டாடிமகிழ்ந்தனர்.
ஆனால் இன்னும் முழு அமைதி தொடரவில்லை என்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாடுகள்தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறி இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள புலிகள்மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications