பெண் பயணியை அவமதித்த பஸ் கண்டக்டர்: நஷ்ட ஈடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழககண்டக்டர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்புஅமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முகம்மதுசஹாபுதீன். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி.
கடந்த 1997ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு குடும்பத்துடன்வருவதற்காக 4 சீட்டுகளை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்சில் முன் பதிவு செய்திருந்தார்முகம்மது.
பயண நாளின்போது பேருந்துக்கு வந்த அவரிடம் பஸ்சின் கண்டக்டர் டிக்கெட்டுகளை வாங்கிப்பரிசோதித்துள்ளார். அப்போது முகம்மதுவின் மனைவியைப் பார்த்த அவர், "25 வயது ஆகும்போல இருக்கிறது. ஆனால் டிக்கெட்டில் 20 என்று கூறி இருக்கிறீர்களே" என்று கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து முகம்மதுவுக்கும் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது கண்டக்டர் அநாகரீகமாகப் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பிறபயணிகளும் முகம்மதுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதையடுத்துதான் முகம்மது குடும்பத்தினரை பயணம் செய்ய அனுமதித்தார் கண்டக்டர்.
இதற்கிடையே கண்டக்டரின் அநாகரீகமான செயலால் மனமுடைந்து போன முகம்மது, சென்னைவந்து சேர்ந்ததும் சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு அமைப்பில் புகார் செய்தார்.
இந்தப் புகாரை விசாரித்த குறை தீர்ப்பு அமைப்பின் தலைவர் கெங்க சுப்பையா, உறுப்பினர்கள்ஷீபா, கதிர்வேல் ஆகியோர் தங்கள் தீர்ப்பில்,
கண்டக்டரின் செயல் பணி அலட்சியத்தையே காட்டுகிறது. அவர் வரம்பு மீறி நடந்துள்ளார்.எனவே இதனால் மனு தாரர் முகம்மதுவுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.5,000வழங்கப்பட வேண்டும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகமும், சம்பந்தப்பட்ட கண்டக்டரும் சேர்ந்து இதை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications