For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஜெ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக நேரில்ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தனி நீதிமன்றத்தில் முதல்வர்ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.95 கோடி மதிப்புள்ளசொத்துக்களைச் சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னையில் உள்ள முதலாவது தனி நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறது.நீதிபதி ராஜமாணிக்கம் நடத்தி வரும் இவ்வழக்கு தொடர்பாக, வழக்கை விசாரித்த போலீஸ்அதிகாரியான நல்லம்ம நாயுடு கடந்த இரண்டு வாரங்களாக சாட்சியம் அளித்து வந்தார்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிசாட்சியம் அளிக்க வேண்டும்.

ஆனால், இன்று தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில்,

சாத்தான்குளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றுப் பயணம் செய்ததால் நான் மிகவும் களைப்பாகஉள்ளேன். உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நான் நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என் தரப்பு வாக்குமூலத்தை என்னுடைய வக்கீல்அளிப்பார்.

இவ்வாறு ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதன் மீதான தீர்ப்பு இன்றே வழங்கப்பட்டுவிடும். தீர்ப்பைப் பொறுத்து அவர் வர வேண்டிஇருக்குமா இல்லையா என்பது தெரியும்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X