""தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்"": கருணாநிதி
மதுரை:
இலக்கியத்திற்காக அரசியலை விட்டுவிட மாட்டேன், அதே நேரத்தில் அரசியலுக்காக இலக்கியத்தைஇழந்து விட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி எழுதிய "தொல்காப்பிய பூங்கா" புத்தக இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழாநேற்று இரவு மதுரையில் நடைபெற்றது. கவியரசு வைரமுத்து வெளியிட மத்திய அமைச்சர் ராஜாஅந்தப் புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
இலக்கியத்திற்காக அரசியலை விட்டுவிட மாட்டேன். அதே நேரத்தில் அரசியலுக்காக இலக்கியத்தைஇழந்து விடவும் மாட்டேன். இரண்டும் என் வாழ்வின் முக்கிய அம்சங்கள்.
தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் பாடுபடுவேன்.அரசியலிலும் தொடர்ந்து ஈடுபடுவேன்.
தமிழுக்காக வாழ்வதில் என்றும் தோல்வி ஏற்படப் போவதில்லை. இதனால் துன்பமும் கிடையாதுஎன்றார் கருணாநிதி.
""பி.டி.ஆரும் காளிமுத்துவும்..."":
முன்னதாக, முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கும், தற்போதைய சபாநாயகரானகாளிமுத்துவுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்தும் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியின்போது பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபாநாயகராக இருந்தார். அப்போதுஅதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைக் கன்னத்தில்அறைந்தார். இதனால் அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து தாமரைக்கனியை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பழனிவேல்ராஜன்.
இப்போது திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி விவகாரத்தில் அடிதடியே இல்லாத நிலையில்,யாரும் யாரையும் தாக்காத நிலையில் அவர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தி அவரை சிறையில்தள்ளியுள்ளார் காளிமுத்து.
இந்த முரண்பாடுகள் பற்றி உங்களுக்குத் (நிருபர்களுக்கு) தெரியும். மக்களும் இதைப் புரிந்துகொள்வார்கள் என்றார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications