27ம் தேதி இந்தியா வருகிறார் ரணில்
கொழும்பு:
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு இந்தியாவில்பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பரில் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,பிரதமராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே இந்தியா சென்ற ரணில், பிரதமர் வாஜ்பாய்உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும்அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் இந்தியாவுக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகிறார்ரணில்.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் முழுமையாக ஆதரித்துள்ளது. ஆனாலும்புலிகள் மீதான தடையை இன்னும் இந்தியா விலக்கிக் கொள்ளவில்லை.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு ஆண்டுநிறைவடைந்துள்ள நிலையில் வரும் 27ம் தேதி இந்தியாவுக்குச் செல்கிறார் ரணில்.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாஉள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார் ரணில்.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர்இந்தியத் தலைவர்களிடம் விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்குச் செல்லும் ரணில் மார்ச் 2ம் தேதி இலங்கைக்குத்திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications