பாக். விமான விபத்தில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் பலி
கராச்சி:
கராச்சி அருகே பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்தஆப்கானிஸ்தான் தொழில் துறை அமைச்சர் ஜூமா முகம்மது முகம்மதி உள்பட 8 பேர்உயிரிழந்தனர்.
கராச்சி விமான நிலையத்திலிருந்து ஈரான் எல்லையில் உள்ள ஜசாக் நகர் நோக்கி இன்று(பாகிஸ்தான் நேரப்படி) காலை 8 மணிக்கு அந்த விமானம் கிளம்பியது.
ஆனால் விமானம் கிளம்பிய 29வது நிமிடத்தில் அதற்கும் விமான நிலையக் கட்டுப்பாட்டுநிலையத்திற்கும் இடையிலான தொடர்பு அறுந்தது.
செஸ்னா 402 ரகத்தைச் சேர்ந்த இந்தக் குட்டி விமானம் கராச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில்பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டது.
இதில் விமானத்திலிருந்த முகம்மது, மூன்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், சீனாவைச் சேர்ந்தமெட்டாலர்ஜி நிறுவன அதிகாரி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி, பைலட் உள்ளிட்டஎட்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள்விரைந்துள்ளன.
பாகிஸ்தான் விமானப் படை தலைவரான முஷாபுர் அலி மிர் சென்ற விமானம் கடந்த வாரம்தான்விபத்துக்குள்ளாகியதில் அவர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று மற்றொருவிமானம் விழுந்து நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->